தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் நிர்வாகிகள் ரத்தம் தானம் செய்தனர். இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களையும் அவர்கள் வழங்கினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் கவுண்டச்சி புதூர் தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் 50 பேர் ரத்தம் தானம் வழங்கினர்.
ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சொர்க்கம் ரமேஷ், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், திருப்பூர் இளைஞரணி தலைவர் ஷேக் பரித், நகரத் தலைவர் சார்லி விக்டர், நகர இளைஞரணி தலைவர் கதிர் தொழிலாளர் அணி தலைவர் ஹரிஹர சுதன், தொழிற்சங்க அணி ஸ்ரீகாந்த், தொண்டரணி பிரபு, மாணவரணி எழில் பிரபாகரன் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இரத்ததான முகாமில் ரத்தம் வழங்கினார்.

முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர் கௌதம் முதல் முறையாக தளபதியின் பிறந்தநாள் அன்று ரத்தம் தானம் செய்வேன் என்று உறுதியற்றார். மேலும் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு, இலவச கண் சிகிச்சை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நிர்வாகிகள் வழங்கினர்.
ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் சொர்க்கம் ரமேஷ், திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், திருப்பூர் இளைஞரணி தலைவர் ஷேக் பரித், நகரத் தலைவர் சார்லி விக்டர், நகர இளைஞரணி தலைவர் கதிர் தொழிலாளர் அணி தலைவர் ஹரிஹர சுதன், தொழிற்சங்க அணி ஸ்ரீகாந்த், தொண்டரணி பிரபு, மாணவரணி எழில் பிரபாகரன் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் இரத்ததான முகாமில் ரத்தம் வழங்கினார்.
முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவர் கௌதம் முதல் முறையாக தளபதியின் பிறந்தநாள் அன்று ரத்தம் தானம் செய்வேன் என்று உறுதியற்றார். மேலும் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு, இலவச கண் சிகிச்சை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை நிர்வாகிகள் வழங்கினர்.