கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த நுழைவாயில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்காக தயாராக உள்ளது. இந்த புதிய நுழைவாயில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
கோவையின் கோபாலபுரம் பகுதியில் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில் நிலையம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவதால், போக்குவரத்து நெரிசலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

இதுவரை ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்ததால், பொதுமக்களும் அலுவலக ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில நாட்களுக்கு முன்பு புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டது. இப்போது இந்த புதிய நுழைவாயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த புதிய நுழைவாயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையின் கோபாலபுரம் பகுதியில் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ரயில் நிலையம் போன்ற முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவதால், போக்குவரத்து நெரிசலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
இதுவரை ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்ததால், பொதுமக்களும் அலுவலக ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில நாட்களுக்கு முன்பு புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டது. இப்போது இந்த புதிய நுழைவாயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த புதிய நுழைவாயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் நேரம் மிச்சப்படுத்தப்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.