தாராபுரம் பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அங்காளம்மன் கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஜீரணோத்தாரண பணிகளுக்குப் பின் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய ராஜகோபுரம் மற்றும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா இதன் ஒரு பகுதியாக நடைபெற்றது.

விழாவின் முதல் நாளில், மகாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் பூரணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாளில், யாகசாலை பூஜை, கோ பூஜை, மஹா பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பின்னர், கும்பம் மற்றும் கடம் புறப்பாடு ஆலயத்தை வலம் வந்து, ஆலய ஸ்தூபி, கோபுரம், ஆலய மூலஸ்தான தெய்வங்கள் மற்றும் புதிய கோபுரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.



அங்காளம்மன் தேவர்கள், மனிதர்கள் மற்றும் இவ்வுலகில் வாழும் அனைத்து சீவராசிகளையும் காக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். பொன்னிவாடியில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன், கூடையில் செங்கல் வடிவில் கொண்டுவரப்பட்டு, பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்காளம்மன் திருவுருவம் செய்யப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மனின் அருளைப் பெற்றனர். இந்த விழா சகல செல்வங்களையும் அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...