சூலூர் பகுதியில் 460 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

கோவை மாவட்டம் சூலூரில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் 460 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, இரண்டு நபர்களைக் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சூலூர் பகுதியில் பெரும் அளவிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

24.07.2024 அன்று, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சூலூர் காவல் நிலைய அதிகாரிகள் பாப்பம்பட்டி அருகே சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் சிவசுப்பிரமணியம் மற்றும் தங்கப்பாண்டி மகன் முருகராஜ் ஆகியோர் ஒரு வாடகை வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

கைதான நபர்களிடமிருந்து மொத்தம் 460 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் 3,03,169/- என மதிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...