கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சர்ச்சை: 333 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 333 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து திமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்ற மாமன்ற சாதாரண கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது. அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், துணை மேயர் தன்னிச்சையாக முடிவெடுத்து 333 தீர்மானங்களை கொடுத்துள்ளதாகவும், இந்த தீர்மானங்களுக்காக பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகவும், ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

பிரபாகரன் மேலும் கூறுகையில், "கடந்த வாரம் 100 தீர்மானங்கள் கொடுத்தார்கள். தற்போது 250 தீர்மானங்கள் கொடுத்துள்ளார்கள். ஒரே நாளில் எப்படி அனைத்தையும் படிக்க முடியும்? திமுக மாமன்ற உறுப்பினர்கள் யாராவது இந்த தீர்மானங்களை படித்திருக்கிறார்களா என்று கேளுங்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.



மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரபாகரன், ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை எனவும் கூறினார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில், வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பின்னர், மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் குறுக்கிட்டு, தற்போதைக்கு அமைதியான முறையில் மன்ற கூட்டம் நடைபெற உதவுமாறும், இது குறித்து பின்னர் விவாதிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சமாதானம் அடைந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...