துடியலூர் அருகே வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளை

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பம் திருப்பதி சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, துடியலூர் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (70). இவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 25ஆம் தேதி கோவை திரும்பினர்.

வீட்டிற்கு திரும்பிய பக்தவச்சலம், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பக்தவச்சலம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...