கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த மண்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு பாஜக குழு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து வேதனையடைந்ததாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அக்குழு தயாராக உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை வானதி சீனிவாசன் ஜூலை 30 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் மீண்டு வர இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வயநாடு மண்சரிவு மீட்புப் பணிகளிலும், மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அக்குழு தயாராக உள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை வானதி சீனிவாசன் ஜூலை 30 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.