கோவை மாநகராட்சி 45வது வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டுமானப் பணிக்கு ஜூலை 31ம் தேதி பூமி பூஜை நடைபெற்றது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட அழகண்ணன் வீதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று (ஜூலை 31) நடைபெற்றது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இந்த அங்கன்வாடி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி ஜெனிசேகர், 45வது வார்டு செயலாளர் கண்ணன் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி ஜெனிசேகர், 45வது வார்டு செயலாளர் கண்ணன் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.