உடுமலை திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வருகின்றன. முதலாம் மண்டல பாசனம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்காக விவசாயிகள் தண்ணீர் திறப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில், காண்டூர் கால்வாயின் நல்லாறு பகுதியில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து நேற்று மாலை காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.



வினாடிக்கு 523 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையில் தேவையான அளவு தண்ணீர் நிரம்பியதும், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 60 அடியில், 28.47 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Newsletter

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...