உடுமலை அமராவதி அணைக்கு 20,000 கன அடி நீர்வரத்து: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அமராவதி அணைக்கு நள்ளிரவில் 20,000 கன அடி நீர்வரத்து காரணமாக, பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நள்ளிரவில் திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டதால், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பிரதான மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், மறையூர், காந்தூலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்திருந்தது. ஆனால், நேற்று இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, நள்ளிரவு 1:30 மணியளவில் அணைக்கு திடீரென 20,000 கன அடி நீர்வரத்து ஏற்பட்டது.



இதனால், கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ராளையம், கொழுமம், மடத்துக்குளம், காரத்தொழுவு, கணியூர் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 88.09 அடியாக உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2,576 கன அடி நீர் உள்வரத்தும், 3,386 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் அணைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...