கோவையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம்: 500க்கும் மேற்பட்டோர் கைது

கோவையில் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



போராட்டக்காரர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமானவை: 14 மாத பஞ்சப்படி உயர்வு வழங்குதல், நீதிமன்ற தீர்ப்புகளை முழுமையாக அமல்படுத்துதல், 2022 டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.



போராட்டக்காரர்கள் தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நிதி இருப்பதாகவும், மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி இல்லை என்று கூறப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இப்போராட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.



இதையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....