கேரள ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து; மாற்றுப் பாதையில் இயக்கம்

சேலம் ரயில் கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 6 அன்று பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சில நிலையங்களை தவிர்த்து இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில் கோட்டத்துக்கு உள்பட்ட பல இடங்களில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு - கோவை மெமு ரயில் (எண்: 06806) செப்டம்பர் 6-ஆம் தேதி பாலக்காடு - போத்தனூர் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும்.

கோவை - ஷொரணூர் மெமு ரயில் (எண்: 06805) கோவை - போத்தனூர் இடையே செப்டம்பர் 6-ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர் - ஷொரணூர் இடையே மட்டும் இயக்கப்படும்.

ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) மற்றும் எர்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகியவை செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிர்க்கப்படும். போத்தனூர் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

ஈரோடு - பாலக்காடு மெமு ரயில் (எண்: 06819) செப்டம்பர் 6-ஆம் தேதி போத்தனூர், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயில் சிங்காநல்லூர், பீளமேடு, வடகோவை, கோவை ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிர்க்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...