கோவை அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்திய 'லிங்க் டிக்கெட்' வசதி

கோவை அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்காக 'லிங்க் டிக்கெட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் முன்பதிவு செய்த பேருந்துகளுடன் நகர பேருந்துகளையும் இணைத்து பயணிக்க முடியும்.


கோவை: கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக 'லிங்க் டிக்கெட்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியின் கீழ், பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 செலுத்தி, பேருந்து நிலையங்களில் இருந்து நகர பேருந்துகளில் வேறு இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல, வேறு இடங்களில் இருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கும் செல்ல முடியும்.

இந்த 'லிங்க் டிக்கெட்' வசதியை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல நகர பேருந்துகளில் இந்த வசதியை பயணிகள் தங்கள் பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அல்லது பின்பு பயன்படுத்தலாம். முன்பதிவு பயணச்சீட்டை நகல் எடுத்தோ, செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்தோ, நடத்துனரிடம் காட்டி பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...