கோவை வழியாக ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து கேரளாவின் கொச்சுவேலி வரை கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 13 முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஹூப்ளி - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 07333) செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், கொச்சுவேலி - ஹூப்ளி சிறப்பு ரயில் (எண்: 07334) செப்டம்பர் 14 ஆம் தேதி நண்பகல் 12:50 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12:50 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் பின்வரும் முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்: கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு மற்றும் பிரூர்.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...