கோவை தொழில் அமைப்புகள் நிதி அமைச்சருக்கு நன்றி: வானதி சீனிவாசன் கருத்து

கோவையைச் சேர்ந்த 11 தொழில் அமைப்புகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையைச் சேர்ந்த 11 தொழில் அமைப்புகள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், "GST சம்பந்தமான தொழில் அமைப்புகள் சந்திப்பு வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி இன்று மக்களை திசை திருப்ப ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு பாஜக கட்சி மற்றும் பிரதமர் மோடி அரசு உறுதுணையாக இருப்பார்கள். இந்த போலி போராட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது. கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக எப்போதும் பாஜகவினர் உறுதுணையாக இருப்போம்" என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முடிவில், "நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்த தொழில் அமைப்புகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...