கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா: 2644 மாணவர்களுக்கு பட்டம்

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர். டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா 21.09.2024 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் இராச.வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.



விழாவில் தமயந்தி வசந்தகுமார், முதன்மைச்செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் டாக்டர் ப.வெங்கடாசலபதி, பதிவாளர் முனைவர் சு.இரவி, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு மற்றும் முதன்மையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



தைரோகேர் அமைப்பாளர் டாக்டர் A.வேலுமணி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.



அவரது உரையில், "பண்பட்ட கல்வியே சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை. தனிமனித ஒழுக்கத்திலும், சமுதாயப் பொறுப்புணர்விலும், திறன் மேம்பாட்டிலும் சிறந்த மாணவர்கள் உயர்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்கின்றனர். அவர்களது பெருமுயற்சிக்கு கல்வியே தலைச்சிறந்த கருவி. நாட்டின் உயர்வே அவர்களது கல்வியின் பெரும்பயன்" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "மாணவர்கள் அத்தகைய பொதுநல நோக்கத்துடன் சிறந்த ஆளுமைகளாக மிளிர வேண்டும். புதிய கல்விக்கொள்கை முதலானவை திறன் மேம்பாட்டிற்கும், ஆளுமை வளர்ச்சிக்கும் துணைசெய்வதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்கள் தமது ஆய்வுப்பங்களிப்பின் வாயிலாக நாட்டின் அனைத்துத் துறைச்சார்ந்த வளர்ச்சிக்கும் ஆக்கம் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய மாணவர்களின் அறிவும், ஆளுமையும் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் A.வேலுமணி, "மாணவர்கள் இதனை உணர்ந்து அடிப்படைக் கல்வி, மருத்துவம் முதலானவற்றுடன் அறிவியல் ஆக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அனைத்து மக்களையும் சென்றடைவதற்கு பொதுநல நோக்கத்தில் உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.





இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2644 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.





அதில் 51 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும், பல்வேறு துறைகள் சார்ந்த 52 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...