கோவை சிங்காநல்லூர் பேருந்தில் முதியவரிடம் ரூ.1 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை

கோவை சிங்காநல்லூர் பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது. கூட்ட நெரிசலில் மர்ம நபர் பிளேடால் பாக்கெட்டை கிழித்து பணத்தை திருடியுள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலைசாமி (65) என்பவர் நேற்று (செப்டம்பர் 22) கோவை அருகே உள்ள நீலாம்பூரில் வசித்து வரும் தனது அண்ணன் மகள் அனுராதா வீட்டுக்கு வந்தார். அங்கு அனுராதாவின் கணவரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டார். அந்தப் பணத்தை தனது டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல புறப்பட்டார்.

திருமலைசாமி ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் சென்று, அங்கிருந்து தனியார் பேருந்தில் சிங்காநல்லூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு மர்ம நபர் பிளேடால் திருமலைசாமியின் டவுசர் பாக்கெட்டை கிழித்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த திருமலைசாமி, உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும்போது தங்கள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...