அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறப்பு: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவரும் கல்வியாளருமான கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்து கொண்டார்.



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பிரிக்கால் லிமிடெட் தலைவர் வனிதா மோகன், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் பங்கேற்றனர்.



பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், அரவிந்த் கண் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் (திட்டங்கள்) அரவிந்த், மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை செய்துள்ள சாதனைகள் குறித்தும் வருங்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.



கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தனது உரையில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ தர்மத்தோடு செயல்படுவதாகவும், அரவிந்த் கண் மருத்துவமனை போன்று சேவை மனப்பான்மையோடும் அர்ப்பணிப்போடும் இருப்பவர்கள் அரசுக்கு மிகவும் உதவிகரமாக செயல்படுவதாகவும் கூறினார்.



மேலும் அவர், தமிழக முதல்வர் கோவையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், சென்னைக்கு இணையாக கோவை முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். "நியூயார்க்கையும் வாஷிங்டனையும் போன்று கோவையும் சென்னையும் வரப்போகிறது" என்று கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...