கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை அக்டோபர் 3 அன்று ஆய்வு செய்தார். இக்கட்டிடத்தை விரைவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் இன்று (அக்டோபர் 3) ஆய்வு செய்தார்.



இந்த புதிய கட்டிடம் பணி நிறைவுற்று, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் திறப்பு விழா காணவுள்ளது. இந்த ஆய்வின் போது, கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி உடனிருந்தார்.



இந்நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.கார்த்திக், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொ.மு.தியாகராஜன், ஐடி விங் நிர்வாகிகள் சஹா விக்னேஷ், எஸ்.நந்தகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கட்டிடம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது அப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...