திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி முதலைப் பண்ணையில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட 3 சவரன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணையில் சுற்றுலாப் பயணி ஒருவர் தவறவிட்ட நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்செந்தூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமராவதி முதலைப் பண்ணையில் 3 சவரன் நகையை தவறவிட்டார். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அந்த நகையை கண்டெடுத்தனர்.

நேர்மையான அந்த சிறுவர்கள், தாங்கள் கண்டெடுத்த நகையை உடனடியாக முதலைப் பண்ணை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த நகையை தேடி வந்த உரிமையாளரிடம் வனக்காப்பாளர் அதனை ஒப்படைத்தார்.
இச்செயல் குறித்து தகவல் பரவியதும், நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர்களின் நேர்மையான செயலை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இத்தகைய நேர்மையான செயல்கள் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், இது போன்ற நல்ல பண்புகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்செந்தூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமராவதி முதலைப் பண்ணையில் 3 சவரன் நகையை தவறவிட்டார். இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் அந்த நகையை கண்டெடுத்தனர்.
நேர்மையான அந்த சிறுவர்கள், தாங்கள் கண்டெடுத்த நகையை உடனடியாக முதலைப் பண்ணை வனக்காப்பாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த நகையை தேடி வந்த உரிமையாளரிடம் வனக்காப்பாளர் அதனை ஒப்படைத்தார்.
இச்செயல் குறித்து தகவல் பரவியதும், நகையை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர்களின் நேர்மையான செயலை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இத்தகைய நேர்மையான செயல்கள் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாகவும், இது போன்ற நல்ல பண்புகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.