அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். மருத்துவத்துறை, இளைஞர்களின் வாழ்க்கை முறை, அரசியல்வாதிகளின் பொறுப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவத்துறை நாட்டில் மிக முக்கியமான துறையாகப் பார்க்கப்படுவதாகக் கூறினார். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதாகவும், நவீன மருத்துவ தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார். மேலும், இந்தியாவில் நோயால் இறப்பவர்களில் 27 சதவீதம் இதய நோயால் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்க அதிகப்படியான விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளைப் பார்க்க வேண்டும் என்றும், மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கைப் பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

செல்போன் பயன்பாடு குறித்தும் வெங்கையா நாயுடு எச்சரித்தார். செல்போனை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்றும், குழந்தைகள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அடிமையாகும்போது அவர்களின் வாழ்க்கை பாழாகிறது என்றும் கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் போரால் தெற்காசிய நாடுகளில் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் உருவாகியுள்ளதாகவும், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக, அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும், அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...