கோவை கொடிசியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்க அக்டோபர் 15 அன்று கொடிசியாவில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், நடைமுறை மூலதனத்திற்காகவும் இந்நிறுவனங்களுக்கு நிதி வசதி தேவைப்படுகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து கடன் வசதியாக்கல் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் கொடிசியா வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள "D" அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முகாம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...