7 கோடி மோசடி! செருப்பால் அடித்த மக்கள்!


கோவையில் 7 கோடிக்குமேல் மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் செருப்பால் அடித்ததால் பரபரப்பு.

திருச்சியைச்சேர்ந்த சின்னசாமி கணபதி பகுதியில் மெட்குயுர் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்தார், திருச்சியை சேர்ந்த பெல் நிறுவனதில் ஒப்பந்த செய்துள்ளதாகவும், அதற்கு பொது மக்கள் ஒரு லட்சம் முதலீடு செய்தால் பத்து மாதத்தில் ஊக்கத்தொகையுடன் ஒரு லட்சத்தி பத்தாயிரமாக வழங்கப்படும் என ஆசை வர்த்தை கூறியதை நம்பி கோவையில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டவர்கள் ரூபாய் ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செலுத்திய தொகை குறித்து முதலீடு செய்தவர்கள் கேட்ட போது, பெல் நிறுவனத்துடன் எந்த ஒரு ஓப்பந்தமும் செய்யவில்லை , மகிழ்ச்சியாக வாழ பணம் தேவைப்பட்டதால்தான் உங்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர் .புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சின்னச்சாமி இன்று விசாரணைக்காக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்துள்ளார். விசாரணை முடிந்த பின்பு வெளியே வந்த சின்னச்சாமியை சூழ்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் செருப்பால் அவரை தாக்கியதால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சின்னசாமியை பத்திரமாக அழைத்து சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது இந்த மோசடியில் சின்னச்சாமியின் குடும்பம் முழுவதும் ஈடுபட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் திருச்சியில் வீடு, நிலம்,200 பவுன் நகைகள் மற்றும் கார்கள் அதிக அளவில் வாங்கியிருப்பதாகவும்,அதை மீட்டு தங்களது முதலீட்டு பணத்தை மீட்டுத்தருமாறு காவல் துறையினரிடம் முறையீட்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...