கோவையிலுள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


உலக முழுவதும் உள்ள சீக்கிய மக்கள் வரும் ஜனவரி 5ம் தேதி அன்று குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா கொண்டாட இருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குருத்வார சிங் சபா சார்பில் குரு கோபிந்த் சிங் 350வது பிறந்தநாள் விழா இம்மாதம் 28ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதிவரை கொண்டாடவுள்ளனர். சீக்கிய மதகுரு மக்கள் ஒன்றிணைந்து ஜனவரி 1ம் தேதி அன்று குருத்வார சிங் சபாவில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் மூலம் ஊர்வலமாக கொண்டு  அப்பகுதியை சுற்றி மீண்டும் குருத்வார சிங் சபாவிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட சீக்கிய மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



பின்னர், ஜனவரி 2ம் தேதி குருத்வார சிங் சபாவில் ராஹி ஜாத பாய், குருப்ரீத் சிங், பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனை பக்தி பாடல்கள் மாலை 7:30 மணி முதல் 9:30 நடைபெறவுள்ளது. ஜனவரி 4ம் தேதி சீக்கிய குரு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  அதனை தொடர்ந்து குருத்வார சிங் சபாவில் ஜனவரி 3-5ம் தேதி வரை சீக்கிய குருமார்கள் குரு கரந்த் சாஹிப் புனித நூல் படித்தல், மற்றும் இறுதிநாளில் குருநானக் கீர்த்தனா மண்டல் சார்பில் கீர்த்தனைகள் இசைக்கப்படவுள்ளது. மேலும் ஜோஹிந்தர் சிங், திலோக் சிங், ராஹி ஜாதா மற்றும் பல்பிர் சிங் ஆகியோரின் கீர்த்தனா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோவையில் 1970ல் சீக்கிய மதத்திற்க்காக கோவில் கட்டப்பட்டது. இன்று குருத்வார சிங் சபா உறுப்பினர்களாக 60க்கும் மேற்பட்டோர் உள்ளனர். குருத்வார சிங் சபா 2017ம் ஆண்டுடன் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...