மத்திய பட்ஜெட்டில் 'சுகாதாரத் துறை' குறித்து மருத்துவர் ராஜேஸ் கண்ணா கருத்து!

நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை 'வெற்று' பட்ஜெட்டாகவே பார்பதாக கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார துறை குறித்த மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. சுகாதார துறைக்கு 28 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை உயர்வு, மருத்துவ செலவு, நோய்களின் தாக்கத்தை ஒப்பிடுகையில் மிக குறைவு".

நாட்டில் உள்ள 1.50 லட்சம் சுகாதார துணை நிலையங்களை தரம் உயர்த்தி, சுகாதார நலமையமாக உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு, உயிர் காக்கும் மருத்துங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகுறைப்பு வரவேற்கத்தக்கது. 

ஆனால், அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதியை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. 

அதேவேளை இவை அனைத்தும் கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் என்பதால் அந்த மையங்கள் அனைத்திலும் ஒரு பிசியோதெரபி மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாத பக்கவிளைவுகள் முற்றிலும் இல்லாத தரமான சிகிச்சைக்கு வழிவகை செய்யும்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் வேண்டும் என்பது எந்த அறிவிப்பும் இல்லை. பிசியோதெரபி மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும் என்பதை சிறிதும் செவி சாய்க்காமல் இத்தாண்டும் வந்துள்ள மத்திய பட்ஜெட்டை வெற்று பட்ஜெட்டாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்றும் என்ன நிலையில் உள்ளது என்பதை நினைத்து பார்க்கையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது கிராமபுற மாணவர்களின் மருத்துவர் கனவை பெரிதும் கேள்வி குறியாக்கியுள்ளது' என கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...