மத்திய பட்ஜெட்டில் 'சுகாதாரத் துறை' குறித்து மருத்துவர் ராஜேஸ் கண்ணா கருத்து!

நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை 'வெற்று' பட்ஜெட்டாகவே பார்பதாக கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சுகாதார துறை குறித்த மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. சுகாதார துறைக்கு 28 சதவிகிதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை உயர்வு, மருத்துவ செலவு, நோய்களின் தாக்கத்தை ஒப்பிடுகையில் மிக குறைவு".

நாட்டில் உள்ள 1.50 லட்சம் சுகாதார துணை நிலையங்களை தரம் உயர்த்தி, சுகாதார நலமையமாக உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு, உயிர் காக்கும் மருத்துங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகுறைப்பு வரவேற்கத்தக்கது. 

ஆனால், அனைத்து மக்களுக்கும் அடிப்படை மருத்துவ வசதியை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. 

அதேவேளை இவை அனைத்தும் கிராமப்புற மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் என்பதால் அந்த மையங்கள் அனைத்திலும் ஒரு பிசியோதெரபி மருத்துவர் பணி நியமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாத பக்கவிளைவுகள் முற்றிலும் இல்லாத தரமான சிகிச்சைக்கு வழிவகை செய்யும்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் வேண்டும் என்பது எந்த அறிவிப்பும் இல்லை. பிசியோதெரபி மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பிசியோதெரபி கவுன்சில் அமைக்க வேண்டும் என்பதை சிறிதும் செவி சாய்க்காமல் இத்தாண்டும் வந்துள்ள மத்திய பட்ஜெட்டை வெற்று பட்ஜெட்டாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்றும் என்ன நிலையில் உள்ளது என்பதை நினைத்து பார்க்கையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்த எந்த அறிவிப்பும் இல்லாதது கிராமபுற மாணவர்களின் மருத்துவர் கனவை பெரிதும் கேள்வி குறியாக்கியுள்ளது' என கோவை எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர் மற்றும் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் ராஜேஸ் கண்ணா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...