FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை:

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருட்களின் அதிகரிப்பும் இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசே மதுக்கடைகளை நடத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதில் கிடைத்ததும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டை மதுவும் போதையும் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து முழுமையான மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, அவை உட்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு பல இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகியதாகவும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத மதுவிற்பனை மையங்கள் இயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், கடந்த ஆட்சியில் FL2 உரிமம் மூலம் மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகள் சமூக சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூக நலனை கருத்தில் கொண்டு FL2 மதுபான உரிமங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அவற்றின் வருவாய் மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...