FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை:

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருட்களின் அதிகரிப்பும் இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசே மதுக்கடைகளை நடத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதில் கிடைத்ததும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டை மதுவும் போதையும் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து முழுமையான மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, அவை உட்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு பல இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகியதாகவும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத மதுவிற்பனை மையங்கள் இயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், கடந்த ஆட்சியில் FL2 உரிமம் மூலம் மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகள் சமூக சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூக நலனை கருத்தில் கொண்டு FL2 மதுபான உரிமங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அவற்றின் வருவாய் மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...