'எண்ணையை வாளியை வைத்து அள்ள முடியுமா?' கோவையில் சீமான் கேள்வி!


தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமையிலான அரசு இருக்கின்றதோ என்ற எண்ணம் தோன்றுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையில் ஏறுதழுவுதல் போன்ற சின்னங்கள்  ஏற்கனவே பல இடங்களில் நிறுவியிருந்தாலும்  மாணவர்களின் கோரிக்கையை ஏற்று் ஜல்லிகட்டு நினைவாக மெரினாவில அச்சின்னத்தை அமைக்கலாம் என விருப்பம் தெரிவித்தார். பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கண்டிப்பதாகவும் தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கும் சேர்த்தே தண்ணீர் கேட்பதாகவும் கூறியதுடன் கேரளாவிற்கு அனைத்து உணவுகளும் தமிழகத்தில் இருந்தே கொண்டு செல்லும் நிலையில் அதனை விளைவிக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கின்றோம் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் சென்னையில் இரண்டு சரக்கு கப்பல் மோதிக்கொண்டதால் எண்ணெய் கசிவு  என கூறப்படும் நிலையில் அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த சூழலில் எண்ணையை வாளியை வைத்து அள்ள முடியுமா என கேள்வி எழுப்பிய அவர்,  வெளிநாடுகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை போல அறிவியல் பூர்வமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.எண்ணை படலம் படர்ந்திருப்பது  என்ன மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியவில்லை எனவும்  மக்கள் மனதில் பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டிய சீமான்,

தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்தும் பிரதமர் மோடி அதற்கான  வருத்தம் கூட தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமையிலான தமிழக அரசு இருக்கின்றதோ என எண்ண தோன்றுகிறது எனவும் ஜெயலலிதா இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பேரணி நடத்த அனுமதி வழங்காத நிலையில் தற்போது சென்னையிலேயே அவர்களுக்கு பேரணிக்கான நடத்த அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவும் எப்போது தேர்தல் நடத்தினாலும் அதை எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்த அவர்,சென்னையில் கலவரத்தின் போது காவலர்கள் தாமாகவே வாகனங்களை கொளுத்தி இருக்க  முடியாது  எனவும் அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும் எனவும் அந்த உத்திரவை வழக்கியவர் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.மேலும் மெரினாவில் 144 தடையே அவசியமற்றது எனவும் இந்த உத்தரவு அச்சத்தை ஏற்படுத்துவதை போல இருக்கிறது எனவும் சீமான் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...