கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் தங்கராஜ் சாம்பியன்


கோவை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் குறிச்சி நண்பர்கள் கேரம் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் ஒற்றையர் பிரிவில் 162 அணிகளும் இரட்டையர் பிரிவில் 56 அணிகளும் பங்கேற்றன. இதன் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழன் கேரம் பயிற்சி மையத்தை சேர்ந்த தங்கராஜ் தன்னை எதிர்த்து விளையாடிய தியாகி சின்னசாமி பயிற்சி மையத்தை சேர்ந்த சுந்தரை 25- 1, 25- 2 என்ற புள்ளியின் அடிப்படையில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதேபோல் இரட்டையர் பிரிவில் சுந்தர், மருதாசல மூர்த்தி ஜோடி முதலிடம் பெற்றனர். ஜூனியர் பிரிவில் அகர்ஷ்ன் மூத்தோர் பிரிவில் தேவராஜ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இதன் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் அதிபர் அரிமா கருணாநிதி வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

விழாவில் கோவை மாவட்ட கேரம் சங்கத்தின் சேர்மன் யுவராஜ், தலைவர் குணசேகரன், செயலாளர் தங்கக்குமார், காப்பாளர் பாஸ்கரன், துணை தலைவர்கள் ராமலிங்கம், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...