திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் தலைமையில், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடையில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் குமார் (23) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர்கள் அதிகம் தங்கி வசிக்கும் ‘லைன் வீடு’ ஒன்றில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தியதில் சுமார் 60 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தானேஸ்வரன் (27) என்பவரும் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...