வேளாண் பல்கலையில் மாபெரும் வேளாண் விழிப்புணர்வு விழா


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை வேளாண் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘அக்ரோநோவா 17’ பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பழங்கால அரிய வேளாண்பொருட்கள் கொண்ட வேளாண் அறிவியல் கண்காட்சியும், இக்கால வேளாண் தொழில்நுட்ப மாதிரிகளும் பங்கேற்பாளர் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன. 

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் மாணவ மாணவியர் அறிவு மற்றும் சிந்தனைத் திறனைத் தூண்டும்விதமாக பற்பல போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விஞ்ஞனிகளை அழைத்து வேளாண் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவின் மூலமாக வேளாண்மையின் பழமையினை இளைய சமுதாயத்திற்கு உணர்த்தி அதன் இன்றைய நிலைபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பங்கேற்கும் ஒவ்வொரு இளைய தலைமுறைக்கும் வேளாண்மை என் தலையாய கடமை என்னும் விதையினை மனதில் ஊன்ற அக்ரோநோவா 17 ஒரு அற ஆயுதமாக செயல்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...