மக்கள் விரோதப்போக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு இந்தியா



தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள், பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் சுப்ரமணி அறிவித்துள்ளார்.



இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் சுப்ரமணி கூறியதாவது:-

மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை இந்தியாவில் வகுத்து வருகின்றது. திட்டங்கள் தோல்வியடைவதை ஒப்புக்கொள்ளாத மத்திய அரசு அதற்கு மாற்றாக மீண்டுமொரு புதிய சட்டத்தை செயல்படுத்துகிறது.

அதற்கு தக்க உதாரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே. வெளி நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு நாட்டுமக்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் வாக்குறுதியாக கூறினார். 

ஆனால் அதை செயல்படுத்த முடியாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால் பல மக்கள் துன்புற்று வருகின்றனர். 

மத ரீதியான பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொள்கிறது. மாட்டுக்கறி உண்பவர்கள் தேசிய விரோதிகளாக வர்ணிக்கப்பட்டு வருகிறார்கள். 

அதோடு தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களிடமும் மதம் சார்ந்த சிந்தனைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும்.

மேலும், ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல், பாமர மக்களிடத்தில் கேஷ் லெஸ் பரிவர்த்தனையை திணிப்பது போன்ற பல்வேறு மக்கள் விரோத போக்கை மத்திய அரசு செய்து வருகிறது.

இதை கண்டித்து வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா சார்பில் வரும் ஏப்ரல் 1 முதல் 25ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளோம். 

25-ம் தேதி தில்லியில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரை திரட்டி பேரணி நடத்த உள்ளோம். மேலும், மாநில அளவிலான பிரச்சனைகளை எங்கள் கட்சி கையில் எடுத்து போரடும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...