பாரதியார் பல்கலையில் 97,123 மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மருத்துவர், முனைவர், இளநிலை முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட மாணவர்களுககு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதி. முதன்மை விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மேன்மைமிகு விஞ்ஞானி சசிபாலா சிங், பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அர.சுப்பையன் மற்றும் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதி தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இயலாத தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமாகிய வித்யாசாகர் ராவ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.வி.அன்பழகன் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தான் பாரதியார் பல்கலைக் கழகத்தின் 10-வது துணைவேந்தராக பதவியேற்ற பின்பு பல்கலைக் கழகத்தின் தரத்தினை இந்திய அளவில் 14-வது இடத்திற்கும், தமிழக அளவில் முதலிடம் பிடித்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும், என்ஏஏசி கமிட்டியின் "ஏ" சான்றிதழ் பெற்றதையும், ஆராய்ச்சி பணிகளில் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் குறிப்பிட்டார்.



இதைத்தொடர்ந்து பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் (டிஆர்டீஓ) தலைமை இயக்குநர் சசிபாலா சிங், பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், உலகிலேயே இந்தியாவில் தான் 15-30 வயது வரை 40 சதவிகிதம் இளைஞர்கள் உள்ளனர். தற்போது இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. 20-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டார்.

மேலும், இயற்கை பேரிடர்களில் சிக்கும் ராணுவ வீர்ர்களை மீட்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் துணை வேந்தர் சுப்பையன் முதலில் அறிவியல் மருத்துவர் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் 3 அறிவியல் மருத்துவர் பட்டங்கள், 1020 முனைவர் பட்டங்கள், 2250 இள முனைவர் பட்டங்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் என மொத்தம் 97123 பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் சபன் பரீத் பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...