கோனியம்மன் திருத்தேர் வெள்ளோட்ட விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் சார்பாக 2017-ம் ஆண்டு 13.02.2017 அன்று திருத்தேர் வெள்ளோட்ட விழாவும் மற்றும் 21.02.2017 முதல் 06.03.2017 வரை திருவிழா நடைபெறும்பொழுது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்; 

அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்டத்தின் போதும் திருத்தேர் விழாவின்போதும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் காவலர்கள் கொண்ட பாதுகாப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. திருக்கோவிலில் பாதுகாப்பு காரணத்திற்காக உலோக தடுப்பு கருவி பொருத்தப்பட உள்ளது. தேர் வடம் பிடிக்கும் பகுதியினைச் சுற்றி பொதுமக்களுக்க எந்தவித இடையூறுகள் ஏற்படாத வண்ணம்  பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், சாதாரண உடையில் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பேருந்துகள், இதர வாகனங்களின் வருகையை தேர் செல்லும் பாதையிலிருந்து மாற்று பாதையில் விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தீயணைப்பு வாகனம் ஒன்றினை தயார் நிலையில் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கவும், மற்றொரு வாகனத்தை வெள்ளோட்ட நாளிலும், தேரோடும் நாளிலும் தேருடன் செல்ல தயார் நிலையில் வைத்திருக்கவும் ஏற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நாளான 13.02.2017 அன்றும், திருத்தேரோட்ட நாளான 01.03.2017 அன்றும் மருத்துவக்குழு முதலுதவி வாகனம் ஒன்று ஏற்பாடு செய்து தேரோட்டம் முடியும் வரை தேருடன் செல்லவும், தேவைப்படுவேருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கவும் தயார் நிலையில் அமைக்கப்பட உள்ளது.

 

திருக்கோயில் நிகழ்ச்சியின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தக்கநடவடிக்கைகள் மேற்கொண்டு தேர் செல்லும் ரத வீதியில் தேர் புறப்படுவதற்க்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் தெளிக்க கோவில் நிர்வாகத்தினருடன் கலந்து தக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. போதிய அளவு குடிநீர் வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

திருத்தேரேட்ட நிகழ்ச்சியில் தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்பு ஒயர்கள் இருந்தால் தேர் வரவுள்ள பாதையில் இரண்டு மணி நேரத்திற்க்கு முன்பாகவே தற்காலிகமாக அகற்றியும், திருவிழா நாட்களில் திருக்கோவிலில் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேர் செல்லும் பாதைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீர்படுத்தி சாலை  செப்பனிடப்பட்டுள்ளது. திருத்தேர் வெள்ளோட்ட நாளான 13.02.2017 அன்றும் 28.02.2017,01.03.2017 ஆகிய மூன்று நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இவ்விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு இறையருள் பெற்றிட வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

இக்கூட்டத்தி மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சிதம்பரம், கோட்டாட்சியர் மதுராந்தகி, கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் விமலா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலர் சந்திரன், வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...