அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், சொத்துக்களை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், தங்களது சொத்துக்களை அபகரித்து இருப்பதோடு, குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சவிதா, ராஜமாணிக்கம் தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜமாணிக்கம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்து இருப்பதாக புகார் தெரிவித்தார்.

மேலும் 20 குண்டர்களை வைத்து தங்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி வருவதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்து அட்டகாசம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அவர், அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...