பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பாலச்சந்தருக்கு "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது"


தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தமிழக அரசின் சென்னை அறிவியல் -விழா 2017 கடந்த 09/02/2017 முதல் 12/02/2017 வரை இராணிமேரி கல்லூரி காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் அறிவியல் நகரம் உயர்கல்வித் துறையின் துறைத் தலைவராக சகாயம் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக், அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் கணேசன்,  அறிவுஒளி (அண்ணாபல்கலைக்கழகம்), தேவசேனாதிபதி (அறிவியல்நகரம்) ரீட்டா மற்றும் ஹேமா முன்னிலையில்  “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” பேராசிரியர் மற்றும் வேதியல்துறை ஆராய்ச்சி இயக்குனர் இராஜேந்திரன் க்கும் மற்றும் "தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது" மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை பாரதியார் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாலச்சந்தர்க்கு வழங்கப்பட்டது.

 

பாலச்சந்தர் கடந்த 2008 ஆம் ஆண்டு முனைவர் பட்டயப் படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் முடித்து தங்கப்பதக்கத்துடன் கூடிய முனைவர் பட்டதைப் பெற்றார். இவர் 2011ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்படிப்பை பயின்றார். 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி திட்டம் (FAST TRACK – Project) மூலம் ருபாய் இருபத்தைந்து லட்சத்து  ஐம்பதாயிரம் (25,50,000) பெற்றுள்ளார். மேலும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மரபியல் ஆராய்ச்சியை மலைவாழ் மக்களிடம் மேற்கொண்டு வருகிறார். 

நரம்பியல் மரபணு குறைபாடு தொடர்பான ஆராய்ச்சியை துவங்குவதற்காக அமெரிக்காவின் Calofornia பல்கலைக்கழகத்துடன் இணைந்து (MOU) ஒப்பந்தம் -மனிதகுருத்தணு தொடர்பாக பெற்றுள்ளார். இவ்வாறாக பல்வேறு சாதனைகளை புரிந்த பாலச்சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித்த்துறை சார்பாக அறிவியல் நகரம் வழங்கும் தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது கௌரவப்படுத்தி வழங்கப்பட்டதை துணைவேந்தர் கணபதி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். 

மேலும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை தலைவர் விஜய் ஆனந்த், முன்னாள் துறைத் தலைவர் சசிகலா, விலங்கியல் துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...