லிட்ரரி ஃபியஸ்டா என்ற ஆங்கில மொழி இலக்கிய விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இலக்கிய மற்றும் நுண்கலை மன்றத்தின் சார்பில் லிட்ரரி ஃபியஸ்டா என்ற ஆங்கில மொழி இலக்கிய விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் மூலம் திறன்சார்ந்த கற்றலின் தேவையே மையக்கருவாக கொண்டிருந்தது.



இவ்விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் எம்.ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா தலைமையுரை வழங்கினார். அப்போது அவர், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தையும், அது வேலைவாய்ப்புகளில் கொண்டுள்ள முக்கியப் பங்கையும் விளக்கினார்.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குமரகுரு கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் கே.தேவதாஸ் பேசுகையில், அன்றாட வாழ்வில் அனைவருக்குமான ஆங்கிலம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அது எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதைக் குறித்தும் உரையாற்றினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கேளிச்சித்திரம் மற்றும் ஓவியப் போட்டிகள் இக்கல்லூரியின் பல்வேறு துறை சார்ந்த மாணவிகளுககாக நடத்தப்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...