தெலுங்கான அரசும் கோவை பிஎஸ்ஜி கல்விக்குழுமமும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

பிஎஸ்ஜி கல்விக் குழுமமும், தெலுங்கானா அரசும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தெலுங்கானா அரசின் கைத்தறி மற்றும் ஜவுலித் துறை இயக்குநர் சைலஜா ராம் ஐயர் மற்றும் பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தின் நிர்வாக அரங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்பொழுது, தெலுங்கானா அரசின் ஐடி துறை அமைச்சரான ராமாராவ், தெலுங்கானா அரசின் ஐடி அமைச்சரவை செயலாளர் ஜெயஸ் ரஞ்சன், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.ருத்ரமூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஐஎம் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.



இந்நிகழ்வில், தெலுங்கானா மாநிலத்தின் ஐடி துறை அமைச்சர் ராமாராவ் பேசும்போது, இந்த ஒப்பந்தமானது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பலமான மனித வளத்தினை உருவாக்குவதற்காக செய்துகொள்ளப்பட்டது.

தெலுங்கானா மாநில அரசு ஜவுளித் துறையினன் வளர்ச்சிக்காக மிகப்பெரிய ஜவுளிப் பூங்காவினை அம்மாநிலத்தில் அமைத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிஎஸ்ஜி கல்லூரியில் தெலுங்கானா மாநில அரசும் ஜவுளிப் பூங்காவினை உருவாக்குவதற்கான செயல்களை இணைந்து செய்யவுள்ளது.

பிஎஸ்ஜி கல்லூரி தொழில்நுட்ப மற்றும் திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு மற்றும் நிர்வாகவியல் வளர்ச்சித் திட்டங்களை தெலுங்கானா அரசுடன் இணைந்து செயல்படுத்தும். இதற்குத் தேவைப்பபடும் நிதியை தெலுங்கானா அரசு இக்ககல்லூரிக்கு வழங்கும். 



வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜவுளி மற்றும் ஆயத்தஆடை துறை மிகுந்த பங்கு வகிக்கிறது. 60 சதவிகித இந்திய மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டள்ளனர். ஆனால் அதில் 15 முதல் 17 சதவிகிதம் உடைய மக்களே பொருளாதாரத்தில் பங்களைப்பை அளிக்கின்றனர். அதனால் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் கிராமப் புர பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முனைப்போடு உள்ளார். கிராமப்புர மக்களின் பொருளாதாரத்திலம் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பெருக்க மிகப்பெரிய ஜவுளி பூங்கா அமைக்க தெலுங்கானா அரமு முடிவு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம் பருத்தி உற்பத்தியில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. அதனால் அணைத்து விதமான ஆடை உற்பத்தியாளர்களுககும் இந்த புதிய ஜவுளிப் பூங்கா ஒரு முக்கியமான அடித்தளமாக இருக்கும்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...