கோவை ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள்

சேலம் தெற்கு கோட்ட ரயில்வே துறை மூலம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.1.75 கோடி ஆகும். இரண்டு நகரும் படிக்கட்டுகளுக்கு ரூ.1.5 கோடியும் மற்றும் அதை சார்ந்த மின் வேலைகள் உள்ளிட்ட கட்டிட செலவுகளாக ரூ.25 லட்சம் என மொத்தம் செலவாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன்பு நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

ஸ்கைவாக் (Skywalk) நகரும் படிக்கட்டுகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து (PF-1A) என்ற தளத்திற்கு செல்வதற்காக வேலைபணிகள் நடைபெறுகிறது. இதில் 1 மணி நேரத்திற்கு 9 ஆயிரம் பேர் உபயோகிக்கலாம். இந்த நகரும் படிக்கட்டுகள் 4.84 மீட்டர் உயரம் கொண்டது. இதற்கான வேலைகள் (17/02/2017) அன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் வேலைப்பணிகள் முடிந்த நிலையில் முன்னோட்டம் இயக்கத்திற்கு பிறகு மக்கள் இதனை பயன்படுத்தலாம். வரும் மார்ச் மாதம் விரைவில் நகரும் படிக்கட்டுகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...