ஆதரவற்றோர்களுடன் மகிழ்ச்சி உரையாடலில் ஈடுபட்ட கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள்

கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்களால் "உதவும் உள்ளங்கள்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சில தொகைகளை திரட்டியுள்ளனர். 



அந்த தொகையினைக் கொண்டு இன்று கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலன் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுடன் உணவு மற்றும் கலை நிகழ்ச்சி என அவர்களுடன் ஒருநாள் இருந்து  கலந்துரையாடி முதியவர்களுக்கு ஆதரவு கூறி மாணவர்கள் மகிழ்வித்தனர்.



இதுகுறித்து சுகுணா ரிப் வி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இது போன்ற பள்ளி மாணவர்கள் ஆதரவற்ற காப்பகத்திற்கு வருவதனால் அவர்களது வாழ்வில் பல அனுபவங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

முதியவர்கள் மாணவர்கள் கலந்துரையாடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது தாய், தந்தை, முதியவர் என யாவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சிறுவயதிலேயே ஏற்படுத்த முடியும்" என தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் இருந்து விடைபெறும்போது மாணவர்கள் அனைவரும் தங்களது தாய், தந்தையரை கடைசிவரை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...