எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017”

எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017” கண்காட்சி மற்றும் விற்பனை பிப்ரவரி 18ம் தேதியன்று துவங்கி ஞாயிறன்று (இன்று) நடைபெற்று வருகிறது. 



ஃபிக்கி (எப்ஐசிசிஐ) லேடீஸ் ஆர்கனைசேஷனின் கோவை பிரிவு சார்பில், மகளிர் தொழில் முனைவோர் பொருட்காட்சி, “உமன் என்டர்பிரனர் பஜார் 2017” எனும் பெயரில் கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமணமண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தயாரிக்கப்படும் மகளிர் உற்பத்தி பொருட்கள் இங்கு 6-வது ஆண்டாக கண்காட்சியாக நடைபெற்று வருகிறது.

கோவையில் பெண் தொழில் முனைவோர், ஆண்களுக்கு சவாலாக பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர். இந்த கண்காட்சி விரிவான தொடர்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு, மகளிருக்கு உதவும் ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளுதல், புதிய வாய்ப்புகள் என்று உற்சாகமாக தகவல் பரிமாற்றம் பெற்று பயன்பெறவும் இந்த பொருட்காட்சி பெரிதும் உதவுவது கடந்த கால அனுபவமாகும். முழுமையாக, வணிக வளர்ச்சிக்கு பலவகையிலும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. 

துவக்க நிலையிலுள்ள மகளிர் தொழில் முனைவோர், இடைநிலையில் உள்ளவர்கள், டாப் இடத்தில் உள்ளவர் என்று அனைவரும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.



இதில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஃபாஷன் உடைகள், சாரீஸ், சல்வார், பிளாக் பிரிண்ட்ஸ், காலனிகள், டெரகோட்டா ஜீவல்லரி, வெள்ளி மற்றும் செயற்கை ஜுவல்லரி, கற்கள் பதித்த ஆபரணங்கள், லினன், வீட்டு அலங்காரம் மற்றும் பரிசுப் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பான தயாரிப்புகள் இன்ஜினியரிங் பொருட்கள் என ஏராளமான மகளிர் படைப்புகள் வாங்கலாம்.



முன்னதாக இந்த கண்காசியின் துவக்க விழாவில் கோவை, சுகுணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சுகுணா லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...