கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் வள மேம்பாடு, அடர்வனம் உருவாக்கம் மற்றும் தீவனப் பயிர் வளர்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு, ராஜேஸ்குமார், சரவணன், கலாராணி, வாட்டர் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள நிர்வாக அலுவலர் லயோனல் பால் டேவிட், தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கொண்டம்பட்டியில் அடர்வனம் உருவாக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வாட்டர் டெக் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மீளச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் புதிய நீர்வள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பயன்பாடின்றி இருந்த நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரக்கன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களும் வளர்க்கப்படவுள்ளன. அவை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் ஊராட்சியின் தேகாணி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 3.55 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் வள மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...