கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டு, அதிலிருந்து 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே இன்று காலை ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மினி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது நடத்தப்பட்ட சோதனையில், மினி லாரியில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், லாரியில் இருந்ததாகக் கூறப்படும் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 54-வது வார்டு கொங்கு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் பாக்கியம் தனபால், சம்பவம் தொடர்பாக நேரில் பார்வையிட்டார்.

பிடிபட்ட மினி லாரி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடியவர்கள் யார், ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்களை அடையாளம் காணும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...