ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செய்து, 88 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனியில் 1.2 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் துறை அதிகாரிகள் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மேம்பாலப் பணிகள் 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்தாலும், மக்கள் பயன்பாட்டிற்காக இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



மேலும், பணிகளில் 88 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ரூ.71 கோடி மதிப்பீட்டிற்குள் எந்தவித தரக்குறைவும் இல்லாமல் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு காய்கறி சந்தைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்படும் சர்வீஸ் சாலைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தொடர்பாக எழுந்துள்ள நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த புகார்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், 40 ஏக்கர் பரப்பளவிலான அந்தப் பகுதியை சீரமைத்து மீண்டும் பசுமை மண்டலமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைப்பதற்கான நிதி ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் மேம்பாலத்தில் மழைநீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...