பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள காரேகவுண்டம்பாளையம் பகுதி மக்கள், பள்ளி குழந்தைகளுக்கு வாகன வசதி செய்துதரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்து வருகிறோம்.



எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு சென்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயின்று வருகின்றனர். ஆனால் எங்கள் ஊரிலிருந்து பள்ளியானது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பள்ளி செல்லும் எங்களது குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல் பள்ளத்திலும், கரடு முரடான பாதைகளிலும் பயணித்து தினமும் பள்ளி சென்று வருகின்றனர். 

அவர்கள், தினமும் இவ்வாறு நடந்து செல்வதால் உடல்நிலை சரியில்லாமல் போவதும் அடிக்கடி நடக்கிறது. இதனால் அவர்களது பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது பகுதிக்கு வாகன வசதி செய்துதர வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...