உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல்


2016 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலுக்கான பணிகளை 31 டிசம்பர் 2016 தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, உயர்நீதி மன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விலக்கம் கேட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மாநில தேர்தல் ஆணையமானது, பொது தேர்வுகள் நடைபெறுவதையொட்டி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், வரும் 2017 மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, நீண்ட மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வரும் மே 15 ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...