உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல்


2016 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலுக்கான பணிகளை 31 டிசம்பர் 2016 தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, உயர்நீதி மன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விலக்கம் கேட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மாநில தேர்தல் ஆணையமானது, பொது தேர்வுகள் நடைபெறுவதையொட்டி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், வரும் 2017 மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, நீண்ட மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வரும் மே 15 ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...