பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி ரூபாய் தொகையை மீட்டுத் தரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அம்மனுவில், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் டெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 35 வருடங்களாக செயல்பட்டு வந்த பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிட்டு (பிஏசிஎல்) என்ற நிறுனத்தில் மாதத்தவணையாகவும், நிரந்தர வைப்பு தொகையாகவும் எங்கள் பகுதி முகவர்கள் மூலம் முதலீடு செய்தோம்.

நாங்கள் கூலி வேலை செய்து சிறுகச்சிறுக சேமித்து பிற்கால குடும்ப தேவைக்காகவும், ஜீவாதாரத்திற்காகவும் இதை முழுக்க முழுக்க நம்பியே முதலீடு செய்தோம்.

நாங்கள் செய்த முதலீட்டுத் தொகைக்கு முதிர்வு தேதியும் முடிந்துவிட்டது. இருப்பினும் எங்களது தொகைகள் வழங்கப்படவில்லை. லட்சக் கணக்கான மக்கள் முதலீடு செய்த சுமார் 6 கோடி ரூபாய் என்னவானது என்றே தெரியவில்லை.

எனவே, மத்திய, மாநில அரசுகளும், கோவை மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது தொகை திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...