ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்


புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், வர்தா புயலுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. தற்போது தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்தார்.

மேலும், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 25 ஆண்டுகளுக்கு பின்பு டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் எனவும் குறிப்பிட்டதுடன் மத்திய அரசு அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அதற்காக தமிழக அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருமாவளவன், தருமபுரி இளவரசன் வழக்கு சிபிசிஐடி-க்கு கொடுக்கப்பட்ட போதே இந்த முடிவை தாங்கள் எதிர்பார்த்ததாகவும், தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு  செல்ல வேண்டும் என்பதே தங்களின் கருத்து எனவும் கூறினார்.

சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பது அவை விதிகளில் இல்லை என சொல்லப்பட்டாலும், சட்டப்பேரவை தலைவர் எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கலாம் எனவும், சட்டமன்றத்தில் சபாநாயகர் சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்று இருந்தால் தமிழக முதலமைச்சர் அதை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், முதலமைச்சர் ஏன் இது குறித்து எதுவும் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...